நேர்மையாக செயல்பட்டவரை பாராட்டிய எஸ்பி
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்;
நெல்லை அரசன்குளம் நடுத்தெருவை சேர்ந்த முருகன் என்பவர் முக்கூடல் பேருந்து நிலையத்தில் 48,500 பணத்துடன் கேட்பாரற்று கிடந்த மணிபர்சை எடுத்து சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இந்த நேர்மை பாராட்டி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் முருகனுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்று மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.