சரக அளவிலான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ

அரூரில் சரக அளவிலான விளையாட்டு போட்டிகளை அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமார் துவக்கி வைத்தார்;

Update: 2025-08-08 01:00 GMT
அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரூர் சரக அளவிலான தடகளப் போட்டிகள் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அரூரை போட்டி மையமாக கொண்டு அரசு உயர்நிலைப்பள்ளி கீரைப்பட்டியை போட்டி சரக மையமாக கொண்டு ஒரு வார காலமாக நடைபெற உள்ள போட்டியினை நேற்று அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் கொடி ஏற்றி, துவக்கி வைத்தார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விஜயகுமார் முன் மாவட்ட மத்திய கூட்டுறவு இயக்குனர் R.R.பசுபதி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் PTA தலைவர் கீரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி கிருஷ்ணன் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி தாளாளர் அருட்தந்தை மாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News