கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் பருவம் மற்றும் அரையாண்டு தேர்வு தொடக்கம்.!!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப் பட்டியல் அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவம் தொடங்கப்பட்டது.;
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப் பட்டியல் அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இரண்டாம் பருவம் மற்றும் அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 வரை நடைபெறுகிறது. தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களில் தேர்வு நடைபெறுகிறது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை டிசம்பர் 15- தமிழ்மொழி தேர்வு, டிச 16- ஆங்கிலம், டிச18 கணிதம், டிச 19 உடற்கல்வி தேர்வு, டிச 22 அறிவியல், டிச 23 சமூக அறிவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுகிறது. முதல் நாள் நடைபெற்ற தமிழ் தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் தேர்வு எளிதாக இருந்ததாகவும் படித்த வினாக்கள் அனைத்தும் இடம் பெற்று இருந்ததாகவும்,மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தேர்வில் காண ஏற்பாடுகளை செய்திருந்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும் போது மாணவ, மாணவிகளுக்கு தேர்வினை சிறப்பாக எழுத வேண்டும் என அறிவுரை வழங்கினார். தேர்வு மைய கண்காணிப்பாளராக ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா, நிவின், செல்வி ஜாய்,ஜெம்ம ராகினி சகாய ஹில்டா உள்ளிட்டோர் செயல்பட்டனர்.