நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் மேலப்பாளையம் 50வது வார்டு ஞானியார் அப்பா நகரில் இன்று (ஆகஸ்ட் 7) ரத்தக் கொடையாளர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் ஆர்வத்துடன் தங்களது பெயர் மற்றும் ரத்த வகைகளை கூறி முகாமில் சேர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவர் கனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.