ஆலங்குளத்தில் கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழபட்டமுடையார்புரம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரது விவசாய கணக்கில் 50 அடி ஆழ கிணற்றில் தண்ணீர் தேடிச் சென்ற போது எதிர்பாரவிதமாக ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண்மான் கிணற்றில் தவறி விழுந்தது. இதுக்கண்டா அப்பகுதி பொதுமக்கள் ஆலங்குளம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தவறி விழுந்த மானை உயிருடன் மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆலங்குளம் தீயணைப்பு துறையினரை வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.