வாலிபர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
தூத்துக்குடியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ;
தூத்துக்குடி சண்முகபுரம், வண்ணார் 1வது தெருவைச் சேர்ந்தவர் இசக்கிதுரை மகன் சக்தி மகேஸ்வரன் (20), பிஏ பட்டதாரி. இன்று காலை வெகு நேரமாக அவர் வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது தாயார் ஜன்னல் வழியாக பார்த்த போது மகன் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவலின் பேரில் தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்கு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.