திருநெல்வேலி மாவட்டம் புதுப்பேட்டை சேகரம் கொண்டாநகரம் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் இன்று(ஆகஸ்ட் 10) பாலர் ஞாயிறு கொண்டாடப்பட்டது.இதில் சிறுவர்,சிறுமிகள் கிரீடம் அணிந்து பாடல் பாடி வீதிகளில் பவனியாக சென்றனர். இந்தநிகழ்ச்சியில் சேகர குருவானவர் சுரேஷ் முத்துக்குமார், சபை ஊழியர் அன்பு ஏசாயா மற்றும் சபை மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.