ராசிபுரத்தில் இரண்டாவது நாளாக கனமழை..
ராசிபுரத்தில் இரண்டாவது நாளாக கனமழை..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடந்த சில தினங்களாக வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் மாலை வேளையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சுழல் நிலவி வருகிறது.