ராமநாதபுரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
இலங்கை அரசு கைது செய்தமீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்திராமேஸ்வரம் தங்கச்சி மடம் மீனவர்கள் காலை வரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்;
ராமநாதபுரம்இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: 20,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழப்பு இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையைக் கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடடியாக விடுதலை செய்யக் கோரியும், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, ராமேஸ்வரத்தில் உள்ள 600க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, 20,000க்கும் மேற்பட்ட மீனவர்களும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்ந்த தொழிலாளர்களும் நேரடியாகப் பாதிக்கப்பட்டு வேலை இழந்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்களாலும், கைது நடவடிக்கைகளாலும் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தங்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.