கன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்திமங்கலம் சேர்ந்தவர்வினோத் மனைவி மோனிஷா. இவர் குழந்தை பிரவசத்திற்காக பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் 13ம் தேதிஅனுமதிக்கப்பட்டு உள்நோயாளியாக தங்கியிருந்த அவருக்கு நேற்று காலை 11.00 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் வலதுகை மற்றும்காலில்முறிவு ஏற்ப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுஅங்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் அலட்சியமே காரணம் என குழந்தையின் தந்தை பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.