குருவிகுளம் அருகே டிராக்டரில் இருந்து பள்ளி மாணவன் தவறி விழுந்து பலி

டிராக்டரில் இருந்து பள்ளி மாணவன் தவறி விழுந்து பலி;

Update: 2025-08-20 07:23 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் பகுதியில் உள்ள நைனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் கௌதம் (14) என்ற பள்ளி மாணவன் குப்பை ஏற்றி சென்ற டிராக்டர் மீது ஏற முயன்ற போது எதிர்பாரவிதமாக தவறி விழுந்து சம்பவ இடத்தில் இன்று உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பள்ளி மாணவனை உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News