டிஒய்எப்ஐ வட்டார மாநாடு

கொல்லங்கோடு;

Update: 2025-08-20 14:46 GMT
குமரி மாவட்டம் கொல்லங்கோடு வட்டார டி ஓய் எப் ஐ மாநாடு நேற்று கண்ணநாகம் இ. எம். எஸ் சென்டரில் வைத்து நடைபெற்றது. வட்டார செயலாளர் ரமேஷ் கொடியேற்றினார் வட்டார துணை தலைவர் ஆனந்த் பாபு தலைமை வகித்தார். மாநாட்டை வாலிபர் சங்க மாவட்ட இணை செயலாளர் ரமேஷ் துவக்கி வைத்தார். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் விஷ்ணு நிறைவுரையாற்றினார். கூட்டத்தில் கொல்லங்கோடு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி முழுநேர மருத்துவமனையாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

Similar News