குமரி : திமுக பிரமுகர் ஆலைக்கு சீல்

தேங்காய் எண்ணெய் ஆலை;

Update: 2025-08-21 11:44 GMT
குமரி மாவட்டம் தமிழக- கேரளா எல்லை பகுதியான பளுகல் பகுதியில் செயல்பட்டு வரும் விற்பனை கூடம் மற்றும் உற்பத்தி நிலையத்தில் இருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனை செய்ய பட்டு வருகிறது. இங்கு வாங்கிய எண்ணையை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள உணவு பாதுகாப்பு துறை ஆய்வகத்திற்கு கேரளா நபர் ஒருவர் ஆய்விற்காக அனுப்பி வைத்தார். அப்போது ஆய்வு முடி பல கெமிக்கல் ,மாமிச கொழுப்பு மற்றும் பாமாயில் கலந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இந்த நிலையில் அவர்கள் நடத்திய விசாரணையில் பளுகல் பேருராட்சி தலைவி திமுக லிஜி-யின் கணவர் விஜின் ஜெயபோஸ் அவரது தம்பி ஷஜின் ஜெயபோஸ் இருவரும் நடத்தி வரும் எண்ணை ஆலை என தெரியவந்தது. இதனால் நடவடிக்கை எடுப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இது சம்பந்தமான செய்திகள் வைரலானதை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராம பாண்டியன் தலைமையில் அந்த ஆலைக்கு ஆய்வுக்கு சென்றபோது இந்த நிறுவனத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் காலாவதி ஆனதும் ,லேபிள் ஒட்டாத 550 லிட்டர் தேங்காய் எண்ணெய் இருந்து அதில் இருந்து சோதனைக்காக மாதிரி எடுக்கப்பட்டதோடு அந்த நிறுவனம் செயல்பட தடை விதிக்கப்பட்டதோடு எண்ணை ஆலைக்கு மற்றும் விற்பனை நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

Similar News