அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு மக்காச்சோள விதைகள் மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கல்.
அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு மக்காச்சோள விதைகள் மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது;
அரியலூர், ஆக.28- அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு மக்காச்சோள விதைகள் மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது இதுகுறித்து அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி சாந்தி தெரிவித்துள்ளாவது தமிழக அரசின் வேளாண் துறையின் மூலம் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல் விளக்கத்திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதைகள் உயிர் உரங்கள் இயற்கை உரங்கள் நானோ யூரியா ஆகிய இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன அரியலூர் வட்டார வேளாண் விரிவாக்கம் மைய கிடங்கில் பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு 1000 எக்டேருக்கும், ஆதி திராவிடர் விவசாயிகளுக்கு 250 எக்டேருக்கும், தேவையான இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மக்காச்சோளம் சாகுபடி செய்யும் அரியலூர் வட்டார விவசாயிகள் பயன் பெறுமாறு வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி தெரிவித்துள்ளார்.இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயி கள் உழவன் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் தங்களது நில உடைமை சான்று, சிட்டா, ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து மானிய விலையில் இடுபொ ருட்களை பெற்றுக் கொள்ள லாம் என அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக் குநர் சாந்தி தெரிவித் துள்ளார். _________________________________________________