பொக்லைன் உதிரி பாக கடையில் பொருட்கள் திருடிய வாலிபர் கைது

போலீசார் நடவடிக்கை;

Update: 2025-08-30 03:05 GMT
சேலம் புதுரோடு மூலக்கடை காவேரிகடை பஸ் நிறுத்த பகுதியை சேர்ந்தவா் பச்சையப்பன். இவர், புதுரோடு பகுதியில் பொக்லைன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த கடையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து மேலாளர் பச்சையப்பன் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சூரமங்கலம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் விக்னேஸ்வரன் (வயது24) என்பவர் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது, இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News