தேன்கனிக்கோட்டை: விநாயகர் சிலைகள் ஏரிகளில் கரைப்பு.
தேன்கனிக்கோட்டை: விநாயகர் சிலைகள் ஏரிகளில் கரைப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஆங் காங்கே சிலைகள் வைத்து கடந்த இரண்டு தினங்களாக சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்த சிலைகள் நேற்று கரைப்பதற்காக வாகனங்கள் மூலம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. முன்னதாக மேளதாளத்துடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் பெரிய ஏரி, பட்டாளம்மன் ஏரிகளில் 12 சிலைகள் கரைக்கப்பட்டன.