சேலம் சூரமங்கலம் அடுத்துள்ள ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 51). இவர் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் நல ஆய்வாளராக உள்ளார். இவரது மகள் வருணிகா பிரியா (வயது 19). நேற்று முன்தினம் மாலை தனியாக இருந்த வருணிகா பிரியா திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டேட் காலணி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி பாப்பிரெட்டிப்பட்டிக்கு சென்று மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.