ஒசூர்: தெருநாய்கள் கடித்ததில் மூன்று சிறுவர்கள் காயம்.
ஒசூர்: தெருநாய்கள் கடித்ததில் மூன்று சிறுவர்கள் காயம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நகரங்களில் உள்ள சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் சாலைகளில் செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடித்துக் குதறி வருகின்றன. வருகின்றன.இந்த நிலையில் ஒசூர் பார்வதி நகர், கடவுள் நகர், குமரன் நகர் பகுதிகளில் தெருக்களில் விளையாடிய சிறுவர்களை நாய்கள் துரத்திச் சென்று கடித்துள்ளது. இதனால் 3 சிறுவர்களுக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த அவர்களை ஒசூர் அரசுஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.