அக்காளின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

போலீசார் விசாரணை;

Update: 2025-09-03 02:59 GMT
திருப்பூர் மாவட்டம் கே.பி.என்.காலனி முதல் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மகன் சபரீஷ் குமார் (வயது 29). இவர் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி, தனியார் நிறுவனத்தில் கணினி என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு சபரீஷ் குமார், சேலம் சிவதாபுரத்தில் உள்ள தனது அக்காள் அனிதாவின் செல்போன் எண்ணுக்கு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். பின்னர் ஓட்டல் அறையில் நைலான் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் குறுஞ்செய்தியை பார்த்த அனிதா மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு விரைந்து வந்து ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தனர். பின்னர் ஓட்டல் ஊழியர்கள் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வந்து ஓட்டல் அறையை திறந்து பார்த்தனர். அப்போது சபரீஷ் குமார் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தனர். பின்னர் சபரீஷ்குமாாின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரீஷ்குமாரின் டைரியை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News