மதுரையில் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்
மதுரை நேதாஜி ரோடு முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது;
மதுரை மேலமாசி வீதி நேதாஜி ரோடு சந்திப்பில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி முருகன் கோவிலில் இன்று (செப்.4) காலை 7 மணிக்கு மேல் மேளதாளத்துடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.