ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பேரூராட்சிக்குட்பட்ட 9-வது வார்டு,அருந்ததியர் பாளையம் நல்லூர் சாலையில், ரூபாய் 17.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் திறக்கப்பட்டது. இதனை, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், இளைஞர்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.