மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட தேவாதூர் கிராமத்தில் புதிதாக எழுந்தருளி இருக்கும் அருள்மிகு காத்தவராய சாமி திருக்கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக பொருளாளரும் தேவாதூர் ஊராட்சி மன்ற தலைவருமான து.குமார் மற்றும் மதுராந்தகம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு அருள்மிகு காத்தவராயன் சுவாமி தரிசனம் செய்தனர்.இந்த குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.