நச்சு கழிவுகளை குடித்ததால் மூன்று ஆடுகள் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே உள்ள பட்டின மருதூர் கிராமத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கெமிக்கல் என்ற நிறுவனத்தில் இருந்து வெளியேறிய நச்சு கழிவுகளை குடித்ததால் மூன்று ஆடுகள் உயிரிழப்பு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை;

Update: 2025-09-09 09:27 GMT
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே அமைந்துள்ளது பட்டினமருதூர் கிராமம் இங்கே ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கெமிக்கல் என்ற நிறுவனம் அமைந்துள்ளது இந்த நிறுவனத்திலிருந்து அடிக்கடி நச்சுக் கழிவுகள் முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் அந்தப் பகுதியைச் சேர்ந்த குளம் மற்றும் வெளியில் விடுவதால் பொதுமக்கள் உடல் நலம் பாதிக்கப்படுவது உடன் அந்த நீரை பருகும் கால்நடைகள் இறக்கும் சூழ்நிலையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்நிலையில் நேற்று பட்டினமருதூர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கு சொந்தமான மூன்று ஆடுகள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கெமிக்கல் ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுக்கழிவுகளை குடித்ததாக தெரிகிறது இதில் நச்சு கழிவுகளை குடித்த மூன்று ஆடுகளும் பலியாகி இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நடராஜன் இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பலியான ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்

Similar News