தளி: கர்நாடகா மது பாக்கெட்டுகள் கடத்தியவக்கு காப்பு.
தளி: கர்நாடகா மது பாக்கெட்டுகள் கடத்தியவக்கு காப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி போலீசார் தமிழக எல்லையான கும்ளாபுரம் சோதனைச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டூவீலரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் கர்நாடகா மாநில மதுபானங்களை கடத்தி செல்வது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தியல் அவர் தளி அருகேயுள்ள ஆருப்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி சீனிவாசன்(46) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.7,680 மதிப்பிலான 96 மது பாக்கெட்டுகள், மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.