கிருஷ்ணகிரி அணையில் நீர்மட்டம் அதிகரிப்பு.
கிருஷ்ணகிரி அணையில் நீர்மட்டம் அதிகரிப்பு.;
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அதன் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் மொத்த ஆழம் 52 அடியாக உள்ள நிலையில் தற்போது நீர்மட்டம் 50.15 அடியாக உயர்ந்துள்ளது. வினாடிக்கு 1697 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது, 2195 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.