புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த கும்மங்குளம் கிளை சாலையில் அருண்நாதன் (30) என்பவர் பிக்கப் வாகனத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குடி காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு யூனிட் மணலுடன் பிக்கப் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.