தஞ்சாவூரில், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
பாராட்டு விழா;
, தஞ்சாவூரில் காவேரி வண்டல் கலை இலக்கியக் கூடுகை சார்பில், தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, சாதனை படைத்த சான்றோர்களுக்குப் பெருமைப்படுத்தும் பெருவிழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விழாவுக்கு தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினரும், காவேரி வண்டல் கலை இலக்கியக் கூடுகை கௌரவத் தலைவருமான ச.முரசொலி தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், தமிழ் இணையக் கல்விக் கழக நெறியாளர் செந்தலை ந. கௌதமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆசிரியர்கள் புதுக்குடி ஆதிதிராவிடர் நலப் பள்ளி செ.சந்திரஜோதி, வானரங்குடி ஆதிதிராவிடர் நலப் பள்ளி இ.ஹரிகிருஷ்ணன், அத்திவெட்டி அரசு பள்ளி பால சண்முகவேலன், கஞ்சனூர் இந்து பள்ளி சி.ராஜேஸ்வரி, துகிலி கஸ்தூரிபா காந்தி பள்ளி இரா.முத்தையன், திருவாய்ப்பாடி ஒன்றியப் பள்ளி ச.ராஜா, சேரன்குளம் அரசு பள்ளி கோ.கண்ணன், ஆலத்தூர் அரசு பள்ளி சி.மரகதம், பட்டுக்கோட்டை அரசு பள்ளி க.சுமித்ரா, பைவ் ஸ்டார் பள்ளி த.லதா, கும்பகோணம் நகரப் பள்ளி வெ.மோகன், பட்டீஸ்வரம் அண்ணா அரசு பள்ளி ஏ. சிவசங்கர், லெட்சுமாங்குடி ஒன்றியப் பள்ளி த.கருணாநிதி, மேலமறவக்காடு தேவி பள்ளி இரா.அன்புகொடி, மூவாநல்லூர் அரசு பள்ளி இரா.குபேந்திரன் ஆகியோர் பாராட்டப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டன. மூத்தப் பத்திரிகையாளர் கோ.சீனிவாசனுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் விருது, திருமங்கலக்கோட்டை பள்ளிக்கு ரூ.2 கோடி மதிப்பில் நிலம் வழங்கிய பொன்.கோவிந்தராசுக்கு தமிழவேள் உமாமகேசுவரனார் விருது, தமிழக அரசின் இயற்கை வேளாண் ஆலோசனைக் குழு உறுப்பினர் கோ.சித்தருக்கு நம்மாழ்வார் விருது, தமிழக முதல்வரால் ஏரி மனிதர் என பாராட்டப்பட்ட நிமல் ராகவனுக்கு கரிகால்சோழன் விருது, திருவாலம்பொழில் முன்னோடி விவசாயி மா.ராமமூர்த்திக்கு நெல் ஜெயராமன் விருது, பார்க்கிங் பட இயக்குநர் பா.ராம்குமாருக்கு செவாலியர் சிவாஜிகணேசன் விருது ஆகியவை வழங்கப்பட்டன. இவ்விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) இ.மாதவன், காவேரி வண்டல் கலை இலக்கியக் கூடுகை தலைவர் சா.ஆசிப் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கூடுகை பொதுச் செயலர் இரா.செழியன் வரவேற்றார். நிறைவாக, ஆலோசனைக் குழு உறுப்பினர் பு.விசுவநாதன் நன்றி கூறினார்.