புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த கோவிலூரை சேர்ந்தவர் தவசெல்வம் இவர் கந்தர்வகோட்டை அடுத்த விநாயகர் கோவில் அருகே சட்டவிரோத மதுபான பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 26 மதுபான பற்றுக்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.