அறந்தாங்கி அடுத்த ரெத்தின கோட்டையை சேர்ந்தவர் ஜெய் கணேஷ் (65). இவருக்கு திருமணம் ஆகி 30 வருடமான இந்நிலையில் 10 ஆண்டுகளாக ஜெய் கணேஷ் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாக நேற்று திடீரென்று அவரது வீட்டில் உள்ள மரத்தில் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.