கோவை: கஞ்சா வழக்கு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது !

கஞ்சா குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் செயல்படுத்தப்பட்டது.;

Update: 2025-09-19 05:57 GMT
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி 6.5 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த கேரளாவைச் சேர்ந்த முனீர் (24) என்பவரை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தையடுத்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், முனீர்மீது குண்டர் தடுப்பு சட்டம் அமல்படுத்த உத்தரவு பிறப்பித்தார். பொது ஒழுங்கு மற்றும் சுகாதாரத்திற்கு பாதகமாக செயல்படுவோருக்கு எதிராகவும், இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

Similar News