புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே பெருமருதூரில் இருந்து அறந்தாங்கி நோக்கி வைக்கோல ஏற்றிச் சென்ற லாரியில் மேலே சென்ற மின் கம்பி உரசியதால் வைக்கோல் லாரி முழுவதும் தீ பற்றி மளமளவென எரிந்தது. லாரியை ஓட்டி வந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக வண்டியில் இருந்து குதித்து உயிர் தப்பினார். பொதுமக்கள் உடனடியாக குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் அணியில் ஈடுபட்டனர்.