சிதம்பரம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
சிதம்பரம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;
கடலூர் மாவட்டம், சிதம்பரம் துணை மின் நிலையத்தில் இன்று (20 ஆம் தேதி) பராமரிப்புப் பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இதனால் சிதம்பரம் நகரப் பகுதிகள், அம்மாப்பேட்டை, மாரியப்பாநகர், வண்டிகேட், சி. முட்லூர், கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, அண்ணாமலைநகர், மணலூர், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம், பிச்சாவரம், கிள்ளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.