கோவையில் தனியார் பேருந்து எதிர் திசையில் சென்றதால் பரபரப்பு !
சாலையில் குழப்பம், வாகன ஓட்டிகள் சிரமம்.;
கோவை மாவட்டம் – மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒரேசமயம் எதிர் திசையில் ஓடியதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சமும் குழப்பமும் ஏற்பட்டது. சத்ய ஸ்ரீ என்ற பெயருடைய பேருந்து, மேட்டுப்பாளையம்–கோவை வழியாக சென்றபோது, எதிர் திசையில் இயக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.