தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை சாலையில், நேற்று முன்தினம் இரவு தேவதானப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் மூவர், டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் கடந்து சென்ற காட்டுப்பன்றி மீது டூவீலர் மோதி விபத்து நடந்தது. இதில் காட்டுப் பன்றி இறந்தது. காயமடைந்த மூன்று சிறுவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வனத்துறையினர் விசாரணை.