உலக இதய தினத்தை முன்னிட்டு நெல்லை காவேரி மருத்துவமனை சார்பில் மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் பிரசன்ன குமார், கமிஷனர் அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி நகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், கோடீஸ்வரன் நகர் கிளை செயலாளர் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றனர். இவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.