செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் கூட்டம்
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் கூட்டம்;
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, தொழில் துவங்க வங்கிக் கடன், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 344 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ஈமச்சடங்கிற்கான நிதியை, கலெக்டர் வழங்கினார்.