புதுகை கலெக்டர் அருணா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலை தேடும் இளைஞர்களை தனியார் துறைகளில் பணி அமர்த்தும் நோக்கத்துடன் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் புதுகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 26ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை மணிக்கு நடக்கிறது. முகாமில் 15க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற் றும் திறன்பயிற்சி அளிக்கும் பங்கேற்று தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்யவுள்ளனர். முகாமில், 10ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 35 வய துக்கு உட்பட்ட வேலைதேடும் இளைஞர்கள் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொள்ளலாம். 10நிறுவனங்கள் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், வேலைநாடும் இளைஞர்கள் தமிழ்நாடு தனியார்துறை வேலை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்தும் பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.