எம்எல்ஏ தலைமையில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்
எம்எல்ஏ தலைமையில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்;
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் அம்மா பேரவை சார்பாக மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் நெல்வாய் கிராமத்தில் விடியா திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் திண்ணை பிரச்சாரம் அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டாக்டர். N.ரங்கராஜன் ஏற்பாட்டில் இன்று( 23.09.2025) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயளாலர் திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம்,செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை கழக செயலாளர் ஆனூர் V.பக்தவச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு நெல்வாய் கிராமத்தில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி விடிய திமுக அரசின் அவலங்களை எடுத்துரைத்தார். இந்நிகழ்வின் போது ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணி நிர்வாகிகள், ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் அணி சார்பு நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடனிருந்தனர்.