மகள் மாயம். தந்தை புகார்.

மதுரை மேலூர் அருகே 16 வயதுடைய மகளிர் காணவில்லை என தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.;

Update: 2025-09-26 09:42 GMT
மதுரை மாவட்டம் கிடாரிப்பட்டியை சேர்ந்த மச்சக்காளையின் 16 வயதுடைய மகள் நேற்று முன்தினம் (செப் .24) மாலை பலசரக்கு கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவரது தந்தை நேற்று (செப் .25) மதியம் மேலவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

Similar News