கரூரில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பாஜக மாநில இளைஞரணி தலைவர் ஆறுதல்
கரூரில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா ஆறுதல்;
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவரின் மனைவி கோகுல பிரியா, மணிகண்டன் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு பா.ஜனதா மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா நேற்று இரவு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது பா.ஜனதா மாநில இளைஞரணி செயலாளர் முத்தூர் விசாகன், வெள்ளகோவில் வடக்கு ஒன்றிய தலைவர் முத்தூர் அண்ணாமலையார் ராஜ்குமார், வெள்ளகோவில் நகர தலைவர் ஆதித்யா செந்தில் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.