திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது
திண்டுக்கல் அருகே திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது;
திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த திருட்டு வழக்கில் திண்டுக்கல், NGO-காலனி, வடக்கு ரெங்கநாதபுரத்தை சேர்ந்த ராஜா(40) என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து ராஜா நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் திண்டுக்கல் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இதுதொடர்பாக புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாலுகாகாவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்புஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு ராஜாவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்.