அதிக விலைக்கு மது விற்ற நபர் கைது
குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.;
குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. நடராஜன் உள்பட போலீசார் பலரும் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இடைப்பாடி சாலை உழவர் சந்தை அருகே , அதிக விலைக்கு மது விற்றுக்கொண்டு இருந்தார். நேரில் சென்ற போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் அவர் கூலித்தொழிலாளி தன்ராஜ், 29, என்பது தெரியவந்தது.