உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் திடீர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
பொதுமக்கள் அளித்துள்ள மனுக்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார். முகாமிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என பார்வையிட்டு, பொதுமக்களை அவர்களின் கோரிக்கைக்கு தொடர்புடைய துறைகள் உள்ள அறைக்கு அழைத்துச் செல்ல மகளிர் சுய உதவிக்குழுக்கள், தன்னார்வலர்கள் மூலமா;
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் ஜெமின் பேரையூர் ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி பார்வையிட்டு, இன்று பெறப்பட்ட மனுக்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதனடிப்படையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் - நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட பயனாளிகள் மன நெகழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட ஜெமீன் பேரையூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு ஜெமீன் பேரையூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட லாடபுரம், மேலப்புலியூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு லாடபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் இன்று (08.10.2025) நடைபெற்றது. இதில், ஜெமீன் பேரையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத்துறை, இ-சேவை மையம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், தொழிலாளர் நலத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட 15 அரசுத்துறைகள் பங்கேற்று 46 வகையான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கிட ஏதுவாக ”உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் வழங்கப்படும் சேவைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், இன்று பொதுமக்கள் அளித்துள்ள மனுக்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார். முகாமிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என பார்வையிட்டு, பொதுமக்களை அவர்களின் கோரிக்கைக்கு தொடர்புடைய துறைகள் உள்ள அறைக்கு அழைத்துச் செல்ல மகளிர் சுய உதவிக்குழுக்கள், தன்னார்வலர்கள் மூலமாக முறையாக வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றதா என்றும், பெறப்படும் மனுக்கள் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றதா என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மக்களின் இருப்பிடத்திற்கே சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றுவதே ஆகும். எனவே தொடர்புடைய அலுவலர்கள் இதன் மீது தனி கவனம் செலுத்தி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், இன்று பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் வருவாய் துறையின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், தொழிலாளர் நலத்துறை சார்பில் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளையும், வீட்டு வரி ரசீதில் பெயர் மாற்ற ஆணைகளையும் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். நலத்திட்ட உதவிகள் பெற்ற பயனாளிகள் தெரிவிக்கையில், "அரசு அலுவலகங்களை நாங்கள் தேடிச் சென்ற காலம் மாறி அரசு அலுவலர்கள் அனைவரும் நாங்கள் இருக்கும் கிராமத்திற்கு நேரில் வந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அதை நிறைவேற்றி தரும் இந்த சிறப்பு வாய்ந்த முகாமினை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்" என்றனர். இந்நிகழ்வில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் திருமதி சிவக்கொழுந்து, ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமலதா, ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.