நலன் காக்கும் ஸ்டாலின் முகாம் ஆட்சியர் ஆய்வு
மாரண்டஅள்ளியில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் முகாம் ஆட்சியர் ஆய்வு;
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று (11.10.2025) பார்வையிட்டு, காச நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவ பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். உடன் துனை இயக்குநர் சுகாதாரம் மரு.இராஜேந்திரன் மரு பாலசுப்பிரமணியம் மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், அரசுத்துறை அலுவலர்கள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்