மான் வேட்டையாட முயன்றவர்கள் கைது

அரூர் வனச்சரகத்தில் மான் வேட்டையாட முயன்ற இருவர் கைது;

Update: 2025-10-13 02:25 GMT
அரூர் வனச்சரக அலுவலர் அருண் பிரசாத் தலைமையில் வனத்துறையினர் நேற்று செல்லம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் கள்ளத் துப்பாக்கியை பயன்படுத்தியும், கம்பிவலை அமைத்தும் மானை வேட்டையாட முயன்ற கெளாபாறை கிராமத்தைச் சேர்ந்த ராமன் (58), ஏழுமலை (31) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் இப்படி நடக்க கூடாது என்று எச்சரித்தனர்..

Similar News