உத்தமபாளையம் போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (அக்.12) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் முகமது நிஜாம் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட அசாம் லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக பதிக்க வைத்திருந்தது தெரிய வந்தது.அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் முகமது நிஜாம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.