கோவை: போதை மாத்திரைகள் கடத்தி விற்பனை – ஒருவர் கைது

பூனேவில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு போதை மாத்திரைகள் கடத்தி வந்தவர் கைது.;

Update: 2025-10-17 07:03 GMT
கரும்புக்கடை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை மற்றும் கரும்புக்கடை காவல்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டனர். அதில் அப்பாஸ் என்ற நபர் கைது செய்யப்பட்டு, ரூ.5 லட்சம் மதிப்புள்ள 1,640 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் பூனேவில் இருந்து ரயில் மூலம் மாத்திரைகள் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News