முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்
குமாரபாளையம் முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது.;
குமாரபாளையம் ஸ்ரீ குருகுலம் பொதுநல அமைப்பின் சார்பில், கண்பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல மறுவாழ்வு மையத்தில் தீபாவளி விழா நடைபெற்றது. இந்த மையத்தில் தங்கியுள்ள பெரியோர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பட்டாசு, இனிப்புகள் வழங்கப்பட்டன. தலைவர் தனசேகரன், துணை தலைவர் முருகேசன், செயலர் ரவிக்குமார், பொருளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.