கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு
தாராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை உயிருடன் மீட்டர் தீயணைப்பு துறையினர்;
தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். அவருடைய மனைவி சரஸ்வதி (வயது 45). இவர், ஆடு மேய்த்து வருகிறார். நேற்று இவர், எல்.ஐ.சி. நகர் பகுதி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால்தவறி அருகில் இருந்த 50 அடி ஆழ கிணற்றில் விழுந்துவிட்டார். கிணற்றில் சுமார் 20 அடிக்கு தண்ணீர் இருந்தது. இதை பார்த்தவர்கள், உடனடியாக தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சரஸ்வதியை சுமார் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.