திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் பெரிய தேர் கட்டுமான பணி எம்எல்ஏ ஈஸ்வரன் நேரில் ஆய்வு
தமிழகத்தின் 4வது மிகப்பெரிய தேரான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் புதிதாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 80% பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் தேர் பணிகளை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்ஆய்வு செய்தார்;
தமிழகத்தின் நான்காவது பெரிய தேரான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்கோவில் பெரிய தேர் புதிதாக அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் உபயதாரர்கள் வழங்கிய 2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தின் நான்காவது பெரிய தேரான அர்த்தநாரீஸ்வரர் கோவில் பெரிய தேர் மற்றும் முருகன் தேர் புதிதாக அமைக்கும் பணி கடந்த 12.07. 2024 அன்று பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.ரூ 2 கோடியே 17 லட்சம் உபயதாரர்கள் நிதியுதவியுடன் நூறு டன் மரங்கள் 80 டன் இலுப்பை மரம் 10 டன்வேம்பு 10 டன் தேக்கு உள்ளிட்ட மரங்களைக் கொண்டு 22அடி உயரம் 22 அடி அகலம் கொண்ட இரும்பு அச்சுடன் கூடிய பெரிய தேர் அமைக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் ஆழித்தேர் ஸ்தபதி இளவரசன் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் இந்த தேர் அமைக்கும் பணியை செய்து வருகின்றனர். பூதபார், பூதபார் பீடம், சிறிய உருதாரம், பெரிய உருதாரம் நடகாசனம், தேவாசனம், சிம்மாசனம் என 7 நிலைகளில் உருவாக்கப் பட்டு வரும் தேர் பணிகளில் தேவாசனம், சிம்மாசனம், என்ற 2 நிலைகளை தவிர மற்ற 5நிலை பணிகள் நிறைவடைந்துள்ளது. முழுப் பணிகளும் நிறைவடைந்து வரும் கார்த்திகை மாதம் பெரிய தேர் வெள்ளோட்டம் விடப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தேர் கட்டுமான பணிகளை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் இன்று ஆய்வு செய்தார் ஆய்வின் போது அர்த்தநாரீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு காவலர் குழு உறுப்பினர் அர்த்தநாரி திருச்சங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் உதவி ஆணையர் ரமணி காந்தன்,நாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயலாளர் ராயல் செந்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி உலகநாதன் மைதிலி ஆகியோர் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.